posted 16th August 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
மாறப்போகும் நந்தினியின் வாழ்க்கை
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
இன்றைய மூன்று முடிச்சு சீரியலிலே, சுரேக்கா கொடுமைகளை அனுபவித்தது, ஞானத்தினைப் பெறுவதற்கா? அல்லது ஞானத்தினைப் பெறுவதற்காக கொடுமைகளை அனுபவித்தாளா? அனுபவம் உண்மையினை உணர்த்தியது, அதற்காக உண்மையினை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மனம் சுரேக்காவிற்கு இருந்ததினால்தான் ஏற்றுக் கொண்டாள் அவள் – அதற்காகவும் அவள் நிற்கின்றாள். நந்தினியின் குடும்பத்தின் பாடுகளை, முக்கியமாக சிங்காரத்தின் 24 மணி நேர உழைப்பினை நினைக்கின்றாள்.
அதனை மாதவிக்கும் சொல்கின்றாள். இவற்றினை ஏற்காத மாதவி, சுரேக்காவின் நினைவுகளுக்கு நஞ்சூட்டுகின்றாள். சூரியா - நந்தினியின் கல்யாணத்திற்கு பிள்ளையார் சுழியினைப் போட்டவள் மாதவிதான் என்று மாதவிக்கே சுட்டிக் காட்டினாள், சுரேக்கா. நந்தினி நல்லவள் என்பதனை உணர்ந்தவளாய், தான் அனுபவித்த கொடுமைகளைத் தாண்டி, இன்றுதான் நந்தினியிடம் உண்மையான அன்புடன் கேட்டு வாங்கி உண்ணுகின்றாள். விரும்பியவற்றினை, இன்றுதான் ருசித்து, இரசித்து சாப்பிடும் சுரேக்காவிற்கு எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் மாதவிவும், சுந்தரவள்ளியும். பயத்தின் பிடியினில் அவதிப்படும் சுரேக்கா, இன்றுதான் சந்தோஷமாக இருக்கின்றாள் என்ற ஒரு சிந்தனையும் இல்லாமலும், சுரேக்காவின் மனநிலையினை உணராமலும் வெறுப்பேற்றிக் கொண்டிருக்கும் தாயும், சகோதரியும். கொம்பனியின் கணக்குகளில் வீழ்ச்சியினை அவதானித்து, காரணத்தினை ஆராயும் சூரியா. சுரேக்காவின் மனநிலையினை மாற்றுவதற்காக, அதாவது, நந்தினிக்கு எதிராகத் திருப்புவதற்காக சுந்தரவள்ளியின் திட்டம் சுரேக்காவை கொம்பனி கணக்குகளைப் பழக்குவது போல உள்வாங்கினா.
வெளியில் வந்தால் ஆபத்து றஞ்சித்திற்கு என்பதனை உணர்த்தி வைத்துள்ள கௌஷீத். மீண்டும் சிறைவாசத்தினைத் தொடர்ந்தான் றஞ்சித். தீராத பகையாக பொரிந்து கொட்டும் பாண்டியனும், ஜோதியும்.
ஒரேயொரு நொடியில் சுரேக்காவின் மனநிலை மாறியது எப்படி? கௌஷித்தின் உண்மைகளை வெளிக் கொணர்ந்தாள் நந்தினி. அதுவும், பட்டுக்கோட்டை மக்களின் முன்னால் நிரூபித்தாள். அதனை உண்மையென்று மனதார நம்பினாள், ஏற்றுக் கொண்டாள் சுரேக்கா.
சுரேக்கா, மாதவியின் மேலே இருந்த குற்றச் சாட்டினை நினைவுபடுத்தினாள். மாதவி போட்ட பிள்ளையார் சுழியினை போட்டதே நீதான் என்பதனை சொல்லிச் சொல்லி வெருட்டினாள் சுரேக்கா. அதிர்ந்து போனாள் மாதவி. நீ என்னைச் சொன்னால் நான் உன்னைச் சொல்ல வேண்டிவரும் என்பதனை கூறி மாதவியின் கொட்டத்தினை அடக்கினாள் சுரேக்கா. வால் பொறுத்த ஏதோ மாதிரி மெல்லவும் முடியாமல், விழுங்கவும் இயலாமால் விளி பிதுங்கி நின்றாள் மாதவி.
நண்பனுக்காக பெற்றோரைத் தவிக்க விட்டான் றஞ்சித் என்று பெருமையினைச் சம்பாதிக்கின்றான் றஞ்சித். ஆனால், இதில்லை அவனின் திட்டம். கூட்டுக் களவாணிகள் ஒன்றாய் இருந்தால்தானே திட்டங்களைத் தீ்ட்டலாம், அமூலாக்கலாம் என்ற master plan அவனுடையது.
றஞ்சித்தின் அப்பா பாண்டியனுக்கு என்ன மதிப்போ அதேபோலத்தான், இங்கு சூரியாவின் வீ்ட்டிலும் அருணாச்சலத்திற்கு. ஜோதியோ பாண்டியனுக்கு மிகவும் தன்மையாகச் சொல்லுகையில், அங்கு சுந்தரவள்ளியோ அருணாச்சலத்தை கடித்துக் குதறுகின்றா.
சுரேக்காவின் மாற்றத்தினை தாங்க முடியாமல் தவிக்கும் கல்யாணம். இதைவிட மிகவும் அதிர்ச்சியாக இருந்தது நந்தினிக்கும், சூரியாவுக்கும், அதன் பின்பு அருணாச்சலத்திற்கும். சுரேக்கா காரசாரமாக நந்தினியுடன் இருந்தாலும், உண்மையினை உணர்ந்தவளாய் நியாயத்தின் பக்கம் நிற்கின்றாள். இதிலிருந்து தெரிகின்றதாவது, வளரும் பயிரை வளர்க்கும் விதமும், வளரும் இடமும் மிகவும் முக்கியம் என்பது.
பூமி எப்படித்தான் எமது அட்டகாசங்களை எல்லாம் பொறுக்கின்றதோ அதே போல நந்தினியும் பொறுக்கின்றாள். அதைத்தான் இங்கு சுரேக்கா சொல்லுகின்றாள் மாதவிக்கு.
சுரேக்காவின் மனதினைக் கெடுப்பதிலே மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கும் மாதவியும், சுந்தரவள்ளியும். ஆனால், சுரேக்காவோ மிகவும் நிதானமாக இருக்கின்றாள். எதையும் சமாளிக்கும் மனநிலையினில் சுரேக்கா.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது Reel Review channel லினில் இந்த சீரியலின் overall analysisஇனைச் செய்கின்றேன். இது முற்றுமாக எனது கருத்து என்பதனால், உங்களுக்கு ஏதாவது கூற விரும்பினால் கூறுங்கள். அத்துடன், எமது channelலினைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன். இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் எமது channelலினை subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel இனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!